பணமா நல்ல குணமா
பணம் பத்தும் செய்யும். அது பாதாளம் வரை பாயும் என்று பணத்தைப் பற்றி பல பெருமைகளை கூறுவார்கள் அது என்னவோ உண்மை தான். ஆனால் பாதாளம் வரை பாயும் பணத்தை விட அதன் மீது பற்றில்லாத நல்லவர்களின் குணம் அதை விட ஆழமாக பாயும்.நாம் உழைத்து சம்பாதிக்கும் பணம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் ஒருவர் சேர்க்கும் பணம் அவரை காப்பற்றுவதற்கு மட்டுமே இருக்க வேண்டும். அது அவருக்கும் மகிழ்ச்சியாக மன நிம்மதியாக இருக்கும்.ஆனால் அந்த பணத்தை அவர் காப்பாற்றும் நிலை வரும் தான் அந்த நிம்மதி மனதை விட்டு வெளியேறி விடும் மனநிம்மதி போன பிறகு எத்தனை கோடி பணம் சேர்த்து என்ன பயண். மனித குணம் எப்போதும் உயர்ந்தது. சேரும் பணம் உயரும் வரையே உச்சத்தில் இருக்கும். ரோட்டில் யாரோ ஒருவர் தவறவிட்ட பணம் கட்டாக கிடந்தது. அதை அந்த வழியாக சென்றவன் கண்டெடுத்தான். தானாக வந்தது வீனாக ஏன் விடனும் என்ற பேராசை அவன் மனதில் பற்றியெறிய எடுத்துச் சென்றான். வீட்டில் பதுக்கி வைப்பதை விட நிலத்தில் புதைத்து வைப்பது பாதுகாப்பானது என்று முடிவெடுத்து வீட்டுக்கு வெளியே குழி தோண்டி புதைத்து விட்டு வந்தான். சிறிது நேரம் கழித்து மூடிய பள்ளத்தை தோண...